65 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட பர்கர் தயாரித்து ஏ.ஜே.கே கல்லூரி சாதனை!

நவாக்கரையில் உள்ள ஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறை சார்பில் மாணவர்கள் இணைந்து 65 கிலோ எடையுள்ள மிகப்பெரிய இந்திய காய்கறி பர்கர் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

இதனை தயாரிப்பதற்கு 35 கிலோ மைதா, 1.750 கிலோ சக்கரை, 700 கிராம் உப்பு, 1050 கிராம் ஈஸ்ட், 21 லிட்டர் தண்ணீர் மற்றும் 1.750 மில்லி லிட்டர் தாவர எண்ணெய் போன்ற பொருட்கள் உபயோகப்படுத்தபட்டது. இது 1 அடி 16 அங்குல உயரம் மற்றும் 3 அடி அகலம் கொண்டது. சமையல் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து பர்கர் தயாரிப்பதற்கு 16 மணி நேரம் ஆனது. 3 மாதங்கள் திட்டமிட்டு, 47 மாணவர்கள் மற்றும் 5 தலைமை சமையல் வல்லுநர்கள் இந்த பர்கர் தயாரிப்பில் ஈடுபட்டனர். 134 பவுண்டு எடையை கொண்டுள்ள பர்கர் தான் உலக சாதனை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 

கீரை, தக்காளி, பட்டாணி, சிவப்பு முட்டைக்கோஸ், லெட்டூஸ் மற்றும் ஆலிவ் போன்ற காய்கறி வகைகள் பயன்படுத்தப்பட்டன. இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் பிரத்தேயகமான பிரட் வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரோமா நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார், ஏ.ஜே.கே கல்லூரி செயலாளர் அஜித்குமார் வரவேற்புரையாற்றினார்.  ஏ.ஜே.கே கல்லூரி இயக்குனர் பிந்து அஜித், கேட்டரிங் துறைத் தலைவர் பிரகாஷ், ஆலோசகர் சம்பத் மற்றும் மேலாண்மை ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...