சாலையில் படுத்து உறங்கும் வருங்கால ராணுவ வீரர்கள்!



இந்திய ராணுவத் துறையில் காலியாக உள்ள 24 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் அதற்கான ஆட்சேர்ப்பு முகாம் கோவையில் செயல்பட்டு வரும் பி.ஆர்.எஸ். ராணுவ பயிற்றி மைதானத்தில் புதனன்று (இன்று) அதிகாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதற்காக, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் செவ்வாயன்று இரவு முதலே கோவை பி.ஆர்.எஸ். ராணுவ பயிற்சி மையம் அருகே குவிந்தனர். 



இந்நிலையில், போதுமான பாதுகாப்பு வசதிகளை ராணுவ பயிற்சியாளர்கள் ஏற்படுத்தித் தராததால் அந்த இளைஞர்கள் அனைவரும் பயிற்சி மையத்தின் வெளியே உள்ள அவினாசி சாலையிலேயே படுத்து உறங்கினர்.

சாலை விபத்து, சாலையோரம் உறங்கியவர்கள் மீது வாகனம் ஏறி விபத்து என அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ள நிலையில், ராணுவத்தில் சேர்ந்து நாட்டைப் பாதுகாக்கும் ஆர்வத்துடன் வந்த இளைஞர்களுக்கு எவ்வித பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தித் தராமல் அவர்கள் பிளாட் பாரங்களில் படுத்துரங்கிய காட்சி காண்போரை நெகிழ வைத்தது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...