"வாழ்க்கையை கொண்டாடுவோம்"- புற்றுநோயை வென்று வாழ்வோரின் நினைவுப் பயணம்


புற்றுநோய் என்ற சொல்லை பலரும் விரும்பாததன் காரணம் இந்த நோய் குறித்து இருக்கும் பயம் மற்றும் சந்தேகங்களே ஆகும். அனேகமாக இந்த நோயின் பக்கவிளைவுகள் மற்றும் நோயிலிருந்து மீண்டு வரும் விகிதம் குறைவாக இருப்பதும் கூட இதன் தொடர்புடையதாகும். ஆனால், நிறைய வகை புற்றுநோய்கள் ஆரம்பநிலையில் கண்டறியப்பட்டால் முழுமையாக குணப்படுத்தக்கூடியவை என்ற உண்மையை அனைவரும் தெரிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இன்று புற்றுநோய் எனப்படும் பயங்கரமான நோய்க்கு லேப்பிராஸ்கோப்பி சிகிச்சை முறை ஒரு மைல்கல்லாக விளங்குகிறது.

வெற்றிகரமான விளைவுக்கு தேவையானது ஆரம்ப நிலையிலேயே புற்று நோயைக் கண்டறிவது, மன உறுதி, சிகிச்சை முடியும் வரை முழு ஒத்துழைப்பு ஆகும். 

இதுகுறித்தான நிகழ்ச்சி கோவை ஜெம் மருத்துவமனையின் சார்பில் ''வாழ்க்கையை கொண்டாடுவோம்''- புற்றுநோயை வெற்றிகரமாக ஜெயித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஒரு நினைவுப் பயனம் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில் பங்கேற்ற ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் சி.பழனிவேலு பேசுகையில், வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்களை குறிப்பாக புற்றுநோயை லேப்பிராஸ்கோப்பி சிகிச்சை மூலம் குணப்படுத்தமுடியும் என்று தற்போதைய சிகிச்சை முறை பற்றி விளக்கினார். ஜெம் மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்ட பல புற்றுநோய் சிகிச்சை முறைகள் இன்று உலகம் முழுவதும் பின்பற்றக்கூடிய உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையாகும் என்பதையும் எடுத்துக்கூறினார்.



இந்நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் மாவட்டம் 3201-ன் மாவட்ட இயக்குநர் பிரகாஷ் அங்கப்பன், துணை ஆளுநர் வரதராஜன் மற்றும் கூடுதல் ஆளுநரும் பங்கேற்று உரையாற்றினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...