பெரியதடாகம் பகுதியில் மயங்கிய பெண் யானை - வனத்துறையினர் தீவிர சிகிச்சை


மேற்கு தொடர்ச்சி மலையடிவாரமான கோவை மாங்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரியதடாகம், கரியாங்குட்டை அருகே காட்டு யானை ஒன்று படுத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறைமருத்துவர் மனோகரன் தலைமையில் ஆனைகட்டி கால்நடைத்துறை மருத்துவர் ஜெயந்தி  மற்றும்  வனத்துறையினர் அங்குசென்று பார்த்த போது சுமார் 30 வயதுமதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல் நலகுறைவினால் சோர்வுடன் படுத்திருப்பதைகண்டனர். 

இதை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ள அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு  வருகின்றனர். யானை படுத்திருக்கும் பகுதிக்கு அருகாமையில் 5 யானைகள் கொண்ட கூட்டம் உள்ளதால் வனத்துறையினர் தீவிர  கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானை கடந்த 6 மாத காலத்திற்கு முன்பு தான் குட்டி ஈன்றிருந்தாக கூறப்படுகிறது. 



கடந்த வாரம் மதுக்கரைவனப்பகுதியில் வளையன்குட்டை பகுதியில் யானை ஒன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்த  நிலையில் தற்போது மீண்டும் ஒரு யானை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது  வன உயிரினஆர்வலர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...