பஞ்சப்படி வழங்க வேண்டும் என துப்புறவு மற்றும் சுமைத்தூக்கும் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

கோவையில் உள்ள நுகர்வோர் வாணிப கழகத்தில் பணியாற்றும் சுமைத்தூக்கும் பணியாளர்கள் மற்றும் துப்புறவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்ததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள அரிசு நுகர்வோர் வாணிப கழகம் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் மொத்தம் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு பஞ்சப்படி வழங்க வேண்டும் என கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது, அதே போல் குறைந்தபட்ச கூலி சட்டத்தை நடைமுறை படுத்தியது. ஆனால் இது வரை அவர்களுக்கான பஞ்சப்படி, குறைந்தபட்ச ஊதியம் கொடுப்பதில்லை, அதே போல் கிடங்குகளுக்கு அனுப்பும் பொருட்களின் அளவுகளில் அதிகாரிகள் குளறுபடி செய்வதால் கோவை மாவட்டம் பூசாரி பாளையத்தில் உள்ள நான்கு யூனிட்டுகளுக்கும் சரியான அளவில் பொருட்கள் செல்வதில்லை இதனால் சுமை தூக்கும் பணியாளர்கள் கடுமையாக பாதிக்கபடுவதாக கோவை மாவட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

அதே போல் இங்கு பணியாற்றும் துப்புறவு பணியாளர்களுக்கும் மாதம் 100 ரூபாய் மட்டும் பஞ்சப்படி வழங்கப்படுகிறது. மாத ஊதியமும் 30 ஆண்டுகளாக பணியாற்றிவருபர்களுக்கும் 1500 ரூபாய் அளவிற்கே ஊதியம் வாங்கி வரும் அவலம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். உடனடியாக இவர்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பூசாரி பாளையம் பகுதியில் உள்ள நுகர்வோர் வாணிப கழகத்தில் உள்ள சுமைத்தூக்கும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அரசு இதே மெத்தனப்போக்கை கடைப்பிடித்தால் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர். குறிப்பாக இன்று நாள் முழுவதும் ரேசன் கடைகளுக்கு முறையாக பொருட்கள் அனுப்பப்படவில்லை ஆனால் இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் இது குறித்து கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டினர்.    

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...