மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு: வெளியில் தெரியும் நந்தி சிலை

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிவதால், நீர்பரப்பு பகுதியிலுள்ள நந்தி சிலை, நேற்று பாதிக்கு மேல் வெளியில் தெரிந்தது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணை, பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் மூழ்கியுள்ள, ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்தவ ஆலயத்தின் ஒற்றை கோபுரம் ஆகியவை, நீர்மட்டம் குறையும் போது வெளியே தெரியும். குறிப்பாக, 70 அடியாக சரியும்போது, நந்தி சிலை முகப்பு வெளியில் தெரியும். டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடி நீர் திறப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிகிறது. நேற்று நீர்மட்டம், 64.65 அடியாகவும், நீர் இருப்பு, 28.27 டி.எம்.சி.,யாகவும் சரிந்ததால், நீர்பரப்பு பகுதியிலுள்ள நந்தி சிலை, பாதிக்கு மேல் வெளியில் தெரிந்தது, விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...