தொடர்சிகிச்சைக்குப் பின் வனத்திற்குள் சென்ற பெண் யானை

பெரிய தடாகம் பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானை வனத்துறையினரின் சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

கோவை மாவட்டம் பெரிய தடாகம் அருகே உள்ள வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று உடல்நலக் குறைவு காரணமாக கீழே விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். 

இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அந்த யானைக்கு 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து பாரி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு காட்டு யானையை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இதனிடையே, அப்பகுதியில் 4 காட்டு யானைகள் வந்ததால், சிகிச்சை அளிக்கும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து, இரண்டாவது நாளாக யானைக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து தண்ணீரும், பழங்களையும் வழங்கி வந்தனர். 

மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப்பின் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, வியாழனன்று இரவு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அந்த பெண் யானையை நிற்க வைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் எழுந்து நின்ற யானை மீண்டும் வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...