மார்பக கட்டியை அகற்ற தழும்பில்லா சிகிச்சை - கே.எம்.சி.எச் அறிமுகம்


உலக அளவில் மார்பகக் கட்டிகளை சிறுசிறு துகள்களாக உடைத்து, அவற்றை ஊசியில் உறிஞ்சி எடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதில் எவ்வித தழும்பும் ஏற்படாது. கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் இத்தகைய உறிஞ்சி எடுக்கும் கருவி உதவியுடன் கட்டிகள் நீக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த முறையை மார்பக படமாக்கல் மற்றும் ஆய்வு ஆலோசகரான மருத்துவர் ரூபா ரங்கநாதன் வெள்ளியன்று (இன்று) அறிமுகம் செய்தார்.



சில ஆண்டுகளுக்கு முன் சான் டியாகோ பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே இம்முறை செயல்பாட்டில் உள்ள மார்பக பரிசோதனை மையத்தில் பணியாற்றி ஆய்வும் மேற்கொண்டவர் மருத்துவர் ரூபா. மார்பக படமாக்கல், பரிசோதனை மற்றும் கதிரியக்க நிபுணராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். 



இதுகுறித்து அவர் கூறுகையில், ''இளம் பெண்களின் மார்பகங்களில் எவ்வித வலியும், தழும்பும் இல்லாமல் முழுமையாக கட்டியை அகற்றும் சிகிச்சை உண்மையில் பிரமிக்க வைப்பதாக உள்ளது. இந்தியாவில் சில மருத்துவமனைகளில் மட்டுமே இத்தகைய சிகிச்சை அளிக்கும் முறை உள்ளது. தற்போது அது கோவை மெடிக்கல் சென்டரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெற்றிடத்தை உருவாக்கி, உறிஞ்சி எடுக்க உதவும் இந்த கருவியானது கட்டிகளை நீக்க மட்டுமின்றி ஒரு பகுதியில் உள்ள சந்தேகத்திற்கு இடமான, உணர முடியாத திசுக்களை ஆராய்ந்து கண்டறியவும் உதவும்'' என்றார்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி கூறுகையில், ''அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பெண்களின் மார்பக பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. கோவையில் அத்தகைய வசதிகள் கொண்ட ஒரு மருத்துவ மையத்தை ஏற்படுத்தியிருப்பது மருத்துவத்தில் ஒரு புரட்சிகர மாற்றம். இந்த முறையில் முன்னோடியாக ஒரே இடத்தில் பெண்களின் பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தழும்பு இல்லாத இந்த மார்பக அறுவை சிகிச்சை முறையானது மார்பக மையத்தை மேலும் ஒரு படி உயரச் செய்துள்ளது'' என்றார்.



Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...