மனைவியை கத்தியால் குத்திய கணவர் - போலீஸ் விசாரணை

கோவை, கோவில் மேடு பகுதி, ஜமீதர் வீதியைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி ஷேமலதா (37). இவர்களுக்கு இடையே கடந்த 12 வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்று 7 வயதில் பெண் மற்றும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இதனிடையே, கடந்த 6 மாதத்திற்கு முன் ஏற்பட்ட கருத்துவேறுபாடின் காரணமாக தம்பதியர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், வெள்ளியன்று (இன்று) காலை விஓசி நகர் பகுதியில் ஷேமலதா நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சக்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு ஷேமலதாவை கண்மூடித் தனமாக தாக்கிவிட்டு அப்பகுதியில் இருந்து தலைமறைவானார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷேமலதாவை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த துடியலூர் காவல் துறையினர் தலைமறைவான சக்தியின் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...