வாகனங்களை நிறுத்த தனியார் ஸ்டேண்டுகள் அமைத்து தர வேண்டும் - ஓட்டுநர்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதால் அங்குள்ள ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் நிறுத்த ஸ்டேண்டுகள் அமைத்து தர வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்ட வால்பாறை பகுதிகள் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது. குறிப்பாக விடுமுறை காலங்களில் வழக்கத்தை விட அதிகமான அளவு பயணிகள் வரவு அதிகரிக்கும். பொதுவாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக வால்பாறையில் மொத்தம் 80 ஆட்டோக்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட வாடகை கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாடகை வாகனங்களை நிறுத்த தனியாக ஸ்டேண்டுகள் இல்லாததால் சாலைகளில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. 

இதனால் பொதுக்கூட்டங்கள் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக கூறி சில நேரங்களில் சாலையில் உள்ள ஆட்டோ மற்றும் கார்களை அகற்ற காவல் துறையினர் நிர்பந்தம் செய்வதால் இவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்க கூடிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகை வாகனங்களை நிறுத்த தனியார் ஸ்டேண்டுகள் அமைத்து தர வேண்டும் என ஓட்டுநர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக நகராட்சியின் முக்கிய பகுதியான பேருந்து நிலையங்களுக்கு அருகே அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுவாக வால்பாறையை சுற்றுலா பகுதியாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் வரத்தும் குறைந்து வருவதும் வாடகை வாகன ஓட்டிகளுக்கு பின்னடைவாக தான் பார்க்க முடிகிறது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...