காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது - தமிழிசை சௌந்தரராஜன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  பேசியதாவது:-

''காவிரி விவகாரம் தொடர்பாக திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்வை ஏற்படுத்தாது. அரசியல் காரணங்களுக்காக காலதாமதமாக நடத்தப்படும் இந்த அவசியமற்ற கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளாது. 

3 தொகுதி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடாதது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தமிழக மக்களின் ஆதரவு உள்ளதாகக் காட்டிக் கொள்ளும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடதுசாரி தலைவர்கள் ஏன் தேர்தல் களத்தில் இறங்க பயப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையுடனும், நடுநிலையுடனும் தேர்தலை நடத்த வேண்டும். மக்களின் ஆதரவுடன் மாற்று சக்தியாக பாஜகவை அடையாளப்படுத்தும் வகையில் பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிடும் 3 பேர் பட்டியலை பாஜக மத்திய தலைமைக்கு அனுப்பி உள்ளது. மத்திய தலைமையின் ஒப்புதலுக்கு பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 

மேலும், பணப்பட்டுவாடா செய்த புகாரில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதிகளில் மீண்டும் அதே வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்திருப்பது ஜனநாயகத்தை திராவிட கட்சிகள் மதிப்பதில்லை என்பதை காட்டுவதாக உள்ளது. தலாக் முறை பெண்ணுரிமைக்கு எதிரானது, இம்முறைக்கு இஸ்லாமிய பெண்களே எதிராக உள்ளனர். மதம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் சட்டங்களை பாஜக ஏற்படுத்த முயல்கிறது என்பது தவறானது. 

தமிழக முதல்வர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பொறுப்பற்ற நிலையில் பேசி வருவது ஆரோக்கியமான நடைமுறை இல்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்திப்பு நாகரிக அரசியலின் வெளிப்பாடு. அதில் கருத்து சொல்லவோ, விமர்சனம் செய்யவோ எதுவும் இல்லை. 

சிப்பெட் தமிழகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்படாது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தை ஆளும் கட்சிகள் தகுதியான இடத்தை தேர்வு செய்யவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் நிச்சயம் அமைக்கப்படும். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை தேறி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இலங்கையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பின்புலத்தை ஆராய்ந்து, இதுபோன்ற செயல்களை ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்பட வேண்டும்'' என தமிழிசைசௌந்தரராஜன்   தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...