கோவையில் இரு பெண்கள் மாயம் - விசாரணை

கோவையில் அடுத்தடுத்து இரு கல்லூரி மாணவிகள் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சையத் ரஃபி. இவரது மனைவி தவுலத் விவி. இந்திரா கார்டன் பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு நஷ்ரினா (19) என்ற மகள் உள்ளார். இவருக்கு பெற்றோர்கள் திருமணம் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதற்கு தொடர்ந்து, நஷ்ரினா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற நஷ்ரினா பின் இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் போத்தனூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் மகபூப் செரிப். இவரது மகள் சாரா சம்சத் (22). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சனிக்கிழமையன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சாரா சம்சத் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மகபூப் செரிப் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...