பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்க தயங்க மாட்டோம்: அமெரிக்கா கடும் எச்சரிக்கை

தேவைப்பட்டால் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் தீவிரவாத குழுக்களை தனியாக செயல்பட்டு அழிக்கவும் தயங்க மாட்டோம் என அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்வதைத் தடுக்கும் துறைக்கான செயலாளர் (பொறுப்பு) ஆடம் சுபின் கூறியதாவது:

பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, அந்நாட்டிலிருந்து செயல்படும் அனைத்து தீவிரவாத அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது. குறிப்பாக சில அமைப்புகளை ஊக்குவித்து வருகிறது.

இந்த நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டு அனைத்துத் தீவிரவாத அமைப்புகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்கான உதவிகளை செய்யவும் தயாராக உள்ளோம்.

தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடவும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செல்வதைத் தடுக்கவும் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். எனினும், தேவைப்பட்டால், தனியாகவே செயல்பட்டு அங்குள்ள தீவிரவாதக் குழுக்களை அழிக்கவும் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹக்கானி அமைப்பு, ஆப்கானிஸ்தானில் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால், இந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தயங்கி வரும் நிலையில் அமெரிக்கா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...