துப்புறவு பணியாளர்களின் வாரிசுகளுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும்- தமிழ்புலிகள்


கோவை மாநகராட்சியில் பட்டதாரி இளைஞர்களை துப்புரவு பணி செய்ய ஆணை பிறப்பித்துள்ள நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர்களுக்கு உரிய வேலை வழங்கக் கோரியும் தமிழ்புலிகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ.மார்க்ஸ் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 



அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சியில் துப்புறவுப் பணி செய்து பணிக்காலத்தில் காலமான துப்புறவுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கி வருவது நடைமுறையில் உள்ளது. அந்த வாரிசுதாரர்கள் எந்த படிப்பு படித்திருந்தாலும் அவர்களுக்கு துப்புறவுப் பணி மட்டுமேதான் வழங்கப்படுகிறது. இந்தச் செயல் துப்புறவுப் பணியாளர்களின் குழந்தைகள் என்னதான் படித்தாலும் அவர்கள் அருந்ததியராக பிறந்ததால் துப்புறவுப் பணிதான் செய்ய முடிவும் என்று சுட்டிக்காட்டுவதாக உள்ளது. 

இந்தச் செயல் குலக்கல்வித் திட்டத்தை கோவை மாநகராட்சி பின்பற்றி வருவதாகக் கருதுகிறோம். இந்நிலையை மாற்றி கருணை அடிப்படையில் துப்புறவுப் பணியாளர்களின் வாரிசுகளை பணியில் சேர்க்கும் போது அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை கொடுக்க வேண்டும். 

மேலும், ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் துப்புறவுப் பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த அலுவலக வேலையினை ஒதுக்கித் தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...