தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை - ஒருவர் கைது


கோவை, செல்வபுரம் அடுத்த தெலுங்கு வீதி பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வெரைட்டிஹால் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அங்கு விரைந்த காவல் துறையினர் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் ஸ்ரீனிவாசன் (41) என்பதும், கேரள லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த லாட்டரி மற்றும் 30 ஆயிரத்து 750 ரூபாய் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், வழக்கு பதிவு செய்த காவலர்கள், ஸ்ரீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...