நியாய விலைக்கடைகளில் முறையாக பொருட்கள் வழங்கக்கோரி- மனு

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் உணவுப் பொருட்கள் சரிவர விநியோகம் செய்யக்கோரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு, உளுந்து பருப்பு, பாமாயில், சக்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஒரு மாதத்தில் எந்தத் தேதியிலும் கேட்டாலும் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. இத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நியாய விலைக்கடைகளில் அனைத்து பொருட்களும் பொதுமக்களுக்கு முறையாக விநியோகம் செய்ய வேண்டும். என்று நாளிதழ்களிலும் மற்றும் ஊடகங்களில் தவறாமல் வெளிவருகிறது. ஆனால் நியாய விலைப்பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. இது குறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்திற்கு புகார்கள் வந்துள்ளது. 

இது குறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத் தலைவர் கல்யாணசுந்தரம் பேசுகையில்:-
நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. பொதுமக்கள் 5 கட்டமாக நியாய விலைக்கடைகளில் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதற்கான முறையான திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். ரேஷன் கார்டுகளை பொதுமக்கள் அடையாள சான்றிதழாகத்தான் பயன்படுத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடைகளில் அனைத்தும் சரியான முறைகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் நியாய விலைக்கடைகள் அவ்வாறு சரியான முறையில் செயல்படுவதில்லை. இதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாவிட்டால், அடுத்த கட்டமாக ரேஷன் கார்டு திருப்பி ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...