மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதி சுப்ரீம் கோர்ட்டில் தர்கா அறக்கட்டளை பதில்

‘‘மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதி அளிக்கப்படும்’’ என்று சுப்ரீம் கோர்ட்டில் தர்கா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மும்பை ஒர்லி பகுதியில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள ஹாஜி அலி தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. 15–ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தர்கா, மும்பை நகரின் முக்கிய அடையாள சின்னமாக திகழ்கிறது. இந்த தர்காவுக்குள் நுழைந்து வழிபாடு நடத்த பெண்களுக்கு கடந்த 2012–ம் ஆண்டு முதல் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் ஜாகியா சோமன் மற்றும் நூர்ஜகான் நியாஸ் ஆகிய இரண்டு பெண்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, ‘‘ஹாஜி அலி தர்காவிற்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் 14, 15, 19 மற்றும் 25 ஆகிய ஷரத்துகளுக்கு எதிரானது என்றும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதாக தர்கா அறக்கட்டளை விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு 6 வார காலம் இடைக்கால தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து, ஹாஜி அலி தர்கா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு
வந்தபோது, ‘‘இந்த விவகாரத்தில் முற்போக்குத்தனமான நிலைப்பாட்டை தர்கா அறக்கட்டளை எடுக்கும்’’ என்று நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அதேநேரத்தில், தர்காவுக்குள் பெண்கள் நுழைவதற்கு ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூத், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தர்கா அறக்கட்டளை தனது முந்தைய நிலைபாட்டை மாற்றிக் கொண்டது. ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்களை அனுமதிக்க தர்கா அறக்கட்டளை ஆர்வத்துடன் இருப்பதாக தர்கா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக கூடுதல் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆண்களுக்கு சமமாக பெண்களும் தர்காவுக்குள் நுழைந்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று வாதிட்ட வக்கீல் கோபால் சுப்பிரமணியம், இதற்கு தேவையான உள்கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், 4 வார காலம் அவகாசம் அளிக்குமாறு கோரினார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தர்கா அறக்கட்டளைக்கு கால அவகாசம் அளித்தனர். அத்துடன் இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...