சர்க்கரை, பருப்பு, பலகாரமில்லாமல் தீபாவளிக் கொண்டாட்டம்- மாதர் சங்கம் நூதனப் போராட்டம்

தமிழக மக்கள் சர்க்கரையின்றி, பருப்பின்றி, பலகாரமின்றி பச்சைத் தண்ணியில் தீபாவளி கொண்டாட உள்ளனர் என மாதர் சங்கத்தினர் நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ரேசன் கடைகளில் பருப்பு, சர்க்கரை, எண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உள்ளூர் மக்களின் தேவையை சிறிதும் நினைக்காமல் மத்திய அரசு அதிகளவில் வெளிநாடுகளுக்கு இத்தகையப் பொருட்களை ஏற்றுமதி செய்ததே இதற்குக் காரணம். மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்காலிக முதல்வர் பொறுப்பில் உள்ள பன்னீர்செல்வமும் மக்களின் நலனில் அக்கரை செலுத்தாமல் செயல்பட்டு வருகிறார்.

உடனடியாக அமைச்சரவை கூடி தீபாவளிக்கு முன்பு ரேசன் கடைகளில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், வெறும் நீரில் தான் இந்த தீபாவளியை கொண்டாட நேரிடும் என மாதர் சங்க மாநில துணைத் தலைவர் அமிர்தம் தலைமையில் மாதர் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்திபுரம், காட்டூர் பகுதியில் உள்ள அனைத்திந்திய இளைஞர் பெறுமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதில், கோவை மாவட்ட மாதர் சங்க தலைவர் அமுதா, செயலாளர் ராதிகா, பொருளாளர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...