விக்கிரவாண்டி அருகே பரபரப்பு தண்டவாளத்தில் விரிசல் 4 ரயில்கள் தப்பின: இன்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு

விக்கிரவாண்டி: விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தப்பின விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - விழுப்புரம் இடையே வி.சாலை என்ற இடத்தில் 148வது கி.மீ பாயிண்டில் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று அதிகாலை விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் சென்னை நோக்கி சென்ற ரயில் இன்ஜின் டிரைவர் இதனைப்பார்த்து பேரணி பகுதி ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் வந்து விரிசல் ஏற்பட்ட தண்டவாளப்பகுதியை தற்காலிகமாக சரி செய்தனர். அப்போது சென்னை நோக்கி வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அவ்வழியே வந்த கன்னியாகுமரி, குருவாயூர், மலைக்கோட்டை மற்றும் விழுப்புரம் - சென்னை இடையே இயக்கப்படும் யூனிட் ரயில் ஆகியவையும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் தற்காலிகமாக தண்டவாளம் சீரமைக்கப்பட்ட பின்னர் ரயில்கள் சுமார் 30 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன.  யாரும் கவனித்திருக்காவிட்டால் பெரிய அளவில் விபத்து நடந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக ரயில் இன்ஜின் டிரைவர் கவனித்து சாமர்த்தியமாக தகவல் தெரிவித்ததால் 4 ரயில்கள் பெரும் விபத்தில் இருந்து தப்பின. விசாரணையில் தட்ப வெப்பநிலை மாற்றம் மற்றும் அதிர்வு காரணமாக தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...