ஆக்கிரமிப்புகளால் அடைபட்டு கிடைக்கும் 'கடலைக்கார சந்து'!


பெரிய அகலமான சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பிளாட்பாரங்களிலும் சிறிய அளவில் பெட்டிக்கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்பவர்கள் பற்றி நமக்கு தெரியும். ஆனால் ஒரு குறுகிய சாலையை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் நடக்க கூட இடமில்லாமல் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தை சில வணிகர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

கோவையின் மத்திய பகுதியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் பக்கவாட்டு பகுதியில் அமைந்துள்ளது, இந்த 'கடலைக்கர சந்து'. சுமார் 15 அடி அகலமே கொண்ட இந்த சாலை,  வணிகர்களின் ஆதிக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி 5 அடிக்கும் குறைவாக மாறியிருப்பது வேதனை. இந்த பகுதி முழுவதும் மின்சாதன பொருட்கள் மொத்த விற்பனை நடை பெற்றுவருகிறது. கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சில்லறை வியாபாரிகள். இங்கு வந்து பொருட்கள் வாங்கிச்செல்கின்றனர். 

வியாபாரிகள் கடலைக்கார சந்தில் மின்சாதன பொருட்களை மொத்த விற்பனை செய்யும் கடைகளை அமைத்தனர்.  வியாபாரிகள் தங்கள் கடைகளை சாலைகளின் விளிம்புகள் வரை கட்டி வியாபாரம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், கடையினுள் வைக்க வேண்டிய பல பொருட்களை காட்சி பொருளாக சாலைகளில் வைத்து ஜோராக விற்பனை செய்து வருகின்றனர். மீதமிருக்கும் குறுகிய இடத்தில் தங்கள் வாகனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள்  நடப்பதற்கே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இது குறித்து பலமுறை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டும் மாநகராட்சி நிர்வாகமோ, காவல் துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குமுறுகின்றனர் அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள். கடலைக்கார சந்தின் அருகாமையில், அவிநாசி சாலை மேம்பாலம் உள்ளது இதன் அருகில் அரசின் வாகன நிறுத்தும் இடம் உள்ளது. அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்துவதன் பேரிலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பொருட்டு இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து மாநகராட்சியிடம் புகார் அளிக்க 8190000200 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...