குட்டியுடன் காட்டுக்குள் செல்ல தயாரான பெண் யானை


கோவை மாவட்டம், பெரியதடாகம் அருகே அமைந்துள்ளது மாங்கரை வனப்பகுதி. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கீழே விழுந்துகிடந்தது. இதனையறிந்த வனத்துறை மருத்துவர்கள் அந்த பெண் காட்டு யானைக்கு சிகிச்சை அளித்துவந்தனர். 

யானையின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அப்பகுதியிலேயே உடல் நலமின்றி படுத்துக்கொண்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 21-ம் தேதியன்று அந்த யானையை வனத்துறையினர் லாரியின் மூலம் சாடிவயல் யானைகள் முகாமிற்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். இதனிடையே, அந்தப் பெண் காட்டு யானை கடந்த 24-ம் தேதியன்று ஆண் குட்டி ஒன்றை ஈன்றது. 

இதைத்தொடர்ந்து, யானைக்கும், யானை குட்டிக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததைத்தொடர்ந்து இரு யானைகளின் உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

எனவே, கும்கி யானைகளின் உதவியுடன் அந்த இரு யானைகளையும் காட்டிற்குள் அனுப்ப வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

வனத்துறையினரின் தொடர் சிகிச்சைக்குப் பின் காட்டு யானையின் உடல்நலம் முன்னேற்றமடைந்து தற்போது குட்டியுடன் காட்டிற்குள் செல்லும் நிகழ்வு வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...