2 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் !


கோவை திருமலையாம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள தக்காளி தோட்டத்தில் புகுந்த 12 காட்டு யானைகள், சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி உள்ளது. யானைகள் ஊருக்குள் புகுந்து  பொதுமக்களை அச்சுறுத்துவது சமீப காலங்களில் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் யானைகள்  ஊருக்குள் புகுந்து தாக்கி வருவது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை திருமலையாம்பாளையம் பிரிவு பகுதியில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பிலான தோட்டத்தில் வாழை, தக்காளி, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் 1 மணி அளவில் நாகராஜின் தோட்டதிற்குள் புகுந்த 12 காட்டு யானைகள் தக்காளி தோட்டத்தை சேதப்படுத்தியதோடு அருகில் இருந்த வாழை தோப்பில் புகுந்து சுமார் 20 க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் சாய்த்துள்ளது. 



பின்னர், தோட்டத்தில் அமைந்துள்ள தோட்ட குடிசையை காட்டுயானைகள் தாக்கி உள்ளது. அப்போது குடிசையில் தங்கி இருந்த விவசாயி வடிவேல் நாய் குரைக்கும்  சத்தம் கேட்டு எழுந்துபார்த்தபோது யானைகள் குடிசையை சுற்றி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உயிருக்கு பயந்து தோட்டத்தை விட்டு வெளியேறியவரை சில யானைகள் அவரை துரத்தியதோடு, குடிசையில் வைத்திருந்த அரிசி, பருப்பு மற்றும் தென்னை வெல்லம் ஆகியவை உட்கொண்டதுடன், சாலை குடிசையை இடித்து தள்ளியதில் உள்ளிருந்த டிவி உள்ளிட்ட பொருட்களும் நொறுக்கியது.



யானைகளிடமிருந்து தப்பித்த வடிவேல் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தாமதமாக வந்த வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்து யானைகளை பக்கத்து  தோட்டத்திற்கு விரட்டினர். யானைகள் விலை நிலங்களில் புகுந்ததின் காரணமாக சுமார் 2லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், இதற்கான உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் எனவும் தோட்ட உரிமையாளர் நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். 



மேலும் யானைகள் ஊருக்குள் புகுந்து அச்சுறுத்துவது சமீப காலங்களில் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். ஊருக்குள் புகும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஒரே சமயத்தில் 12 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்திய சம்பவம் விவசாயிகளிடம் பீதியை கிளப்பியுள்ளது.

Newsletter

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...