ஊத்துக்குளி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து.



ஊத்துக்குளி அருகே உள்ள கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தவறான பாதையில் சென்ற லாரி அடுத்தடுத்த 5 வாகனங்களின் மீது மோதிய விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் காயம். 



வட மாநிலத்தவருக்கு சொந்தமான லாரியை அதன் டிரைவர் குடிபோதையில் ஓட்டி வந்துள்ளதாக தெரிகிறது. செங்கப்பள்ளி அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாருமாறாக வந்த லாரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்ற இரண்டு கார் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனம் இவற்றின் மீது மோதி விட்டு நிற்காமல் கோவையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற அரசுபேருந்தின் மீது மோதியதில் அரசு பேருந்து கவிழ்ந்தும், அதன்பின்னர் அந்த லாரி நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி நின்றதாகவும் தெரிகிறது. 

இதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனார். விபத்தினை ஏற்படுத்திய லாரி ஓட்டுனருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு மண்டல காவல் ஆய்வாளர் பாரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா மற்றும் ஊத்துக்குளி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் காயம் அடைந்தவர்கள் பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை. 

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...