கோவை மாநகராட்சி ஆணையாளரை பசுமைத்தீர்ப்பாயம் நேரில் ஆஜராக உத்தரவு !



கோவை வெள்ளளூர் குப்பைக்கிடங்கு அமைந்துள்ள பகுதியில் குடிநீர் மாசுபடுவதையொட்டி அளிக்கப்பட்ட புகாரில் நேரில் ஆஜராகாத கோவை மாநகராட்சி ஆனையாளர் விஜயகார்த்திகேயனுக்கு தென் மண்டலபசுமைத்தீர்ப்பாயம் இன்று நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு  பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை சிங்காநல்லூர் அடுத்த வெள்ளலூரில் ஆயிரக்கணக்கான குடியிருப்பகள் உள்ளது. இதில் கோவை மாநகராட்சியின் 600 ஏக்கர் நிலப்பரப்பளவில் சுமார் 150 ஏக்கர் நிலத்தில் கோவை மாநகரட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகள் கொட்டப்படுவதால்   நோய் பரப்பும்  ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளின் படையெடுப்பால் இங்குள்ள மக்கள் பெரும் உடல் உபாதகைகளுக்கு ஆளாகின்றனர். இதனையடுத்து இப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த குப்பைக்கிடங்கில் உள்ள கழிவுகளில் இருந்து வெளியாகும் நட்சுக்களால் நிலத்தடி நீர் மாசடைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனையடுத்து மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர், ஈஸ்வரன் பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் விசாரனைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என கோவை மாநகராட்சி ஆனையாளர் விஜயகார்த்திகேயனுக்கு உத்தரவிட்டது. தொடர்ச்சியாக மூன்றுமுறை சம்மன் அனுப்பப்பட்டு நேரில் ஆஜராகதாதால் திங்களன்று விசாரனை மேற்கொண்ட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் நவம்பர் 23 தேதிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...