கோவை மாநகராட்சி ஆணையாளரை பசுமைத்தீர்ப்பாயம் நேரில் ஆஜராக உத்தரவு !



கோவை வெள்ளளூர் குப்பைக்கிடங்கு அமைந்துள்ள பகுதியில் குடிநீர் மாசுபடுவதையொட்டி அளிக்கப்பட்ட புகாரில் நேரில் ஆஜராகாத கோவை மாநகராட்சி ஆனையாளர் விஜயகார்த்திகேயனுக்கு தென் மண்டலபசுமைத்தீர்ப்பாயம் இன்று நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு  பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை சிங்காநல்லூர் அடுத்த வெள்ளலூரில் ஆயிரக்கணக்கான குடியிருப்பகள் உள்ளது. இதில் கோவை மாநகராட்சியின் 600 ஏக்கர் நிலப்பரப்பளவில் சுமார் 150 ஏக்கர் நிலத்தில் கோவை மாநகரட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகள் கொட்டப்படுவதால்   நோய் பரப்பும்  ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளின் படையெடுப்பால் இங்குள்ள மக்கள் பெரும் உடல் உபாதகைகளுக்கு ஆளாகின்றனர். இதனையடுத்து இப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த குப்பைக்கிடங்கில் உள்ள கழிவுகளில் இருந்து வெளியாகும் நட்சுக்களால் நிலத்தடி நீர் மாசடைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனையடுத்து மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர், ஈஸ்வரன் பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் விசாரனைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என கோவை மாநகராட்சி ஆனையாளர் விஜயகார்த்திகேயனுக்கு உத்தரவிட்டது. தொடர்ச்சியாக மூன்றுமுறை சம்மன் அனுப்பப்பட்டு நேரில் ஆஜராகதாதால் திங்களன்று விசாரனை மேற்கொண்ட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் நவம்பர் 23 தேதிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...