அமெரிக்க புற்றுநோயியல் நிலையத்துடன் இணைந்த கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி

கோவை மாநகரில் அனைத்து உடல்நல சிகிச்சை தேவைகளுக்கும் ஒரே புகழிடமாகத் திகழும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஹைதராபாத்தைச் சார்ந்த அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டியூட் உடன் இணைந்துள்ளது. இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக விரிவான புற்றுநோய் சிகிச்சை பிரிவு 2017ம் ஆண்டு ஜூலையில் முழுமையாக இயங்கச் செய்வதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் இக்குழுமங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஆன்காலஜி இன்ஷ்டியூட், செயல் இயக்குநரும் மற்றும் கூட்டு நிறுவனருமான ஜோசப் ஏ.நிக்கோலஸ் கூறியதாவது:- 

அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டியூட் என்பது மேற்கத்திய தரக்கட்டுப்பாடுகளை சார்ந்து முழுமையான உயர்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை வழங்கும் நிறுவனமாகும். இதன் முதல் மையத்தை தமிழகத்தில் கோவை மாவட்ட ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பெறுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்'' என்றார்.

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவனத் தலைவரும், நரம்பு மற்றும் தண்டுவட அறுவைசிகிச்சை மருத்துவ ஆலோசகருமான டாக்டர் கே.மாதேஸ்வரன் கூறியதாவது:- 

''சமூக ஊடகம் மற்றும் இணையதள வசதி எளிதாக கிடைக்கும் நிலையில் மக்கள் இப்போது உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று விரும்புகிறார்கள். எங்களுடைய விரிவான புற்றுநோய் சிகிச்சை பிரிவு, அமெரிக்க புற்றுநோயியல் நிலையத்துடன் இணைந்து எங்களுடைய சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உலகிலுள்ள தலைசிறந்த புற்றுநோய் மருத்துவ வல்லுநர்களைக் கொண்டு மருத்துவ நடவடிக்கைகளை தொடங்கவுள்ளது'' என்றார்.

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவன தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் ஆலோசனையில் உருவான இத்திட்டம், இக்குழுமத்தை அங்கம் வகிக்கும் பிரசிதிபெற்ற மருத்துவ புற்றுநோயியல் வல்லுநர் டாக்டர் சுதாகர் நடராஜன் மற்றும் அமெரிக்க ஆன்காலஜி இன்ஷ்டியூட் மருத்துவ புற்றுநோயியல் இயக்குநர் தலைமையில் சிகிச்சை ரீதியாக நடத்தப்படும்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...