திண்டுக்கல்லில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை

திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் பாரதிபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பி.மணிமாறன் என்ற வாட்டார் மணி (38). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்து மக்கள் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். பின்னர், இந்து முன்னணி அமைப்பில் இணைந்து மாவட்ட செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மண்டலத் தலைவர் தர்மாவுடன், மணிமாறனுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாரதிபுரத்தில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகம் அருகே திங்கள்கிழமை இரவு மணிமாறன் ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.

அப்போது, இந்து மக்கள் கட்சி நிர்வாகி தர்மா உள்ளிட்ட சிலர், மணிமாறனுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் கத்தியால் குத்தப்பட்ட மணிமாறன், அண்ணாநகரில் உள்ள தனது வீட்டை நோக்கி ஓடியுள்ளார். அவரை விடாமல் துரத்தி வந்த 2 நபர்கள், மணிமாறனின் வீட்டு வாசலில் அவரை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். அப்போது, மணிமாறனைக் காப்பாற்ற முயன்ற அவரது மனைவி பிரியாவுக்கும் காயம் ஏற்பட்டது. 

பின்னர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிமாறன் உயிரிழந்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...