வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கோவை மாவட்டம் தயார்- ஆட்சியர்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடந்த செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 7ம் தேதி கோவை மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு மற்றும மீட்புப் பணிகள் துறை, பொதுசுகாதாரத்துறை, கால்நடை உள்ளிட்ட பல துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார்.

இதில், கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது 31 இடங்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மண்டலக்குழு, முன்னெச்சறிக்கை குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, வெளியேற்றும் குழு, நிவாரண முகாம் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 1077 என்ற அழைபேசி வசதியுடன் அவசரப் பணி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று மழையினால் வெள்ள பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...