8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: RSS-க்கு தொடர்பு இருக்கலாம் என காங்., குற்றச்சாட்டு

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சிறையிலிருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாடு முழுவதும் கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். இது முக்கியமான பிரச்சனை என கூறியுள்ள அவர், ஆனால் சிமி தீவிரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அல்லது அவற்றை சார்ந்த சில அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சிமி தீவிரவாதிகள் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை மத்தியபிரதேச காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. என்கவுன்டர் வீடியோ காட்சியில் அசைவற்று கிடக்கும் தீவிரவாதிகள் மீது மீண்டும் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதனால் சிமி தீவிரவாதிகள் கொல்லப்பட்டது போலியானது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் இதனை நிராகரித்துள்ள காவல்துறையினர் இது திட்மிட்டு நடத்தப்படவில்லை என்றனர். தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னரே பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கமளித்துள்ளனர். என்கவுன்டரின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    

சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சிறையில் இருந்து தப்ப உதவியர்கள் குறித்தும் தேசிய புலனாய்வு மூலம் விசாரணை நடத்தப்படும் என மத்தியபிரதேச அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர் பூபேந்தர் சிங், இந்த தீவிரவாதிகள் ஏற்கனவே சிறையில் இருந்து தப்பிச் சென்று பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர் என்றார்.  முன்னதாக போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் 8 பேர் நேற்று அதிகாலை சிறைகாவலரை கொன்று விட்டு தப்பினர். பின்னர் தப்பிச் சென்ற அவர்களை புறநகர் பகுதியில் சுற்றிவளைத்த போலீஸார் அவர்களை சுட்டு கொன்றனர்

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...