பருவமழைக் காலத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவது எப்படி?

இன்று முதல் (நவம்பர் 1) டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இக்காலத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவது எப்படி என கோவை போக்குவரத்து காவல் துணை ஆணைய‌ர்  சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.


அவர் கூறுகையில்:- 
மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கு,  பிரேக்,  கிளட்ச்,  டயர் மற்றும் வைப்பர் போன்றவை நன்கு இயங்கும் நிலையில் உள்ளதா என்று பரிசோதிப்பது அவசியம். மழையின் போது வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மழை பெய்யும் போது நம்மால் சாலையை தெளிவாக பார்க்க முடியாது. தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகளில் மிக மெதுவாக வாகனத்தை செலுத்த வேண்டும். மழையால் ஏற்பட்ட சேதம், மழைநீரால் அடித்து வரப்பட்ட பொருட்கள் மற்றும் மூழ்கியுள்ள வேகத்தடைகளால் விபத்து நேரிடலாம். சாலையின் மையப்பகுதியில் பயணிப்பது பாதுகாப்பானது. 


தரைப்பாலங்களின் மேல் வெள்ளம் செல்லும் போது அதனை கடக்க முயற்சிக்க வேண்டாம். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் காவல்துறை மேற்கொள்ளும் தடை மற்றும் போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைக்க வேண்டும். சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பது, மரம் விழுந்து கிடப்பது,  மின்சார கம்பிகள் அறுந்து கிடப்பது மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100ல் தகவல் தெரிவிக்கலாம். மேலும், கோவை மாநகர பொதுமக்கள் 8190000100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார். வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...