பருவமழைக் காலத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவது எப்படி?

இன்று முதல் (நவம்பர் 1) டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இக்காலத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவது எப்படி என கோவை போக்குவரத்து காவல் துணை ஆணைய‌ர்  சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.


அவர் கூறுகையில்:- 
மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கு,  பிரேக்,  கிளட்ச்,  டயர் மற்றும் வைப்பர் போன்றவை நன்கு இயங்கும் நிலையில் உள்ளதா என்று பரிசோதிப்பது அவசியம். மழையின் போது வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மழை பெய்யும் போது நம்மால் சாலையை தெளிவாக பார்க்க முடியாது. தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகளில் மிக மெதுவாக வாகனத்தை செலுத்த வேண்டும். மழையால் ஏற்பட்ட சேதம், மழைநீரால் அடித்து வரப்பட்ட பொருட்கள் மற்றும் மூழ்கியுள்ள வேகத்தடைகளால் விபத்து நேரிடலாம். சாலையின் மையப்பகுதியில் பயணிப்பது பாதுகாப்பானது. 


தரைப்பாலங்களின் மேல் வெள்ளம் செல்லும் போது அதனை கடக்க முயற்சிக்க வேண்டாம். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் காவல்துறை மேற்கொள்ளும் தடை மற்றும் போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைக்க வேண்டும். சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பது, மரம் விழுந்து கிடப்பது,  மின்சார கம்பிகள் அறுந்து கிடப்பது மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100ல் தகவல் தெரிவிக்கலாம். மேலும், கோவை மாநகர பொதுமக்கள் 8190000100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார். வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...