அப்பாவி மக்கள் 8 பேர் கொலை: 14 பாகிஸ்தான் ராணுவ முகாம்களை அழித்து பாடம்

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் காஷ்மீர் எல்லையில் வசித்து வந்த 8 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லை பாதுகாப்பு படை பாகிஸ்தான் ராணுவத்தின் 14 நிலைகளை அழித்துள்ளது.

யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்தது. இதையடுத்து காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாடு கோட்டுப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றும் குக்கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.

நேற்று எல்லையோரம் உள்ள சம்பா, ரஜோரி, ஜம்மு, பூஞ்ச், ராம்கர், நவ்ஷேரா, பாலகோட் பகுதிகளை நோக்கி எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லை பாதுகாப்பு படை பாகிஸ்தான் ராணுவத்தின் 14 நிலைகள் மீது தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

ஜம்முவில் உள்ள ராம்கர் மற்றும் அர்னியா செக்டர்கள் அருகே சர்வதேச எல்லையையொட்டி இருந்த பாகிஸ்தான் நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...