கப்பல் உடைக்கும் தளத்தில் வெடிவிபத்து: பாகிஸ்தானில் 10 தொழிலாளர்கள் சாவு

பாகிஸ்தானில் கப்பல் உடைக்கும் தளத்தில் பழைய எண்ணெய்க் கப்பலை உடைக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். 30 தொழிலாளர்களின் நிலைமை குறித்துத் தகவல் இல்லை.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், கடானி நகரிலுள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் எண்ணெய் ஏற்றிச் செல்லும் பயன்படுத்தப்படாத பழைய சரக்குக் கப்பலை உடைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தீச்சுவாலை மூலம் இரும்பை உருக்கி வெட்டும் "வெல்டிங்' முறையில் கப்பல் உடைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அந்த எண்ணெய்க் கப்பலில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.

கப்பலின் பகுதிகள் தொடர்ந்து பல முறை வெடித்துச் சிதறியதில் அந்தக் கப்பல் முழுவதும் தீப்பிடித்தது.

இதில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 25-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், கப்பலுக்குள் சிக்கியுள்ள சுமார் 30 தொழிலாளர்களின் நிலைமை குறித்து தகவல் இல்லை.

கொழுந்து விட்டு எரியும் எண்ணெய்க் கப்பலில் மேலும் வெடிவிபத்து ஏற்படலாம் என்பதால், மீட்புப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த அனைவரும் கராச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் மம்னூன் ஹுசைனும், பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...