கிணற்றில் விழுந்து 3 பேர் பலி

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த சமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலசாமி. இவரது மனைவி பாலமணி (57). செவ்வாயன்று சமத்தூர் பகுதியில் உள்ள ஜோதிமுத்து தோட்டத்தில் ஆடுகளுக்கு உணவு சேகரிப்பதற்காக பாலமணி சென்றுள்ளார். இவருடன், பாக்கியம் (50), மல்லிகா (45) ஆகியோரும் சென்றுள்ளனர். அங்கு ஒரு மரத்தில் இலை பறித்துக்கொண்டிருந்த போது அருகில் இருந்த 50 அடி ஆழக் கிணற்றில் பாலமணி தவறிவிழுந்துள்ளார். இவரைக் காப்பாற்ற பாக்கியமும், மல்லிகாவும் கிணற்றில் குதித்துள்ளனர். 

இந்நிலையில், மூவரும் நீரில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அப்பகுதிக்கு சென்ற சிலர் கிணற்றில் இருவரின் உடல் மிதப்பதைக் கண்டு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மிதந்துகொண்டிருந்த பாலமணி மற்றும் பாக்கியத்தின் உடலை மீட்டனர். கிணற்றின் அடியில் சிக்கியிருந்த மல்லிகாவில் உடல் நீண்டநேரப் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டது.

உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து கோட்டூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...