பள்ளி மாணவன் உட்பட இருவர் மாயம்

கோவை மாவட்டம், ராயப்பாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகள் லோகவாணி (18). இவர் செவ்வாயன்று காலை வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். பின் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மகாலட்சுமி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிட்டுசாமி. இவருக்கு முருகேசன் மற்றும் ராஜேந்திரன் (32) என்ற இரு மகன்கள் உள்ளனர். ராஜேந்திரனுக்கு கடந்த 6 மாதம் முன்பு ஜானகி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற ராஜேந்திரன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து, அவரது அண்ணன் முருகேசன் பெரியநாயக்கன்பாளைய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேப்போன்று ஆனைமலைப் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், பிரியா தம்பதியரின் மகன் தன்ராஜ் (14). விடுதியில் தங்கி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் செவ்வாயன்று காலை விடுதி காப்பாளர் தன்ராஜின் அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு அவர் இல்லாததைக் கண்டு பெற்றோர்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆனைமலை காவல் நிலையத்தில் பிரியா புகார் அளித்ததைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...