பள்ளி மாணவன் உட்பட இருவர் மாயம்

கோவை மாவட்டம், ராயப்பாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகள் லோகவாணி (18). இவர் செவ்வாயன்று காலை வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். பின் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மகாலட்சுமி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிட்டுசாமி. இவருக்கு முருகேசன் மற்றும் ராஜேந்திரன் (32) என்ற இரு மகன்கள் உள்ளனர். ராஜேந்திரனுக்கு கடந்த 6 மாதம் முன்பு ஜானகி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற ராஜேந்திரன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து, அவரது அண்ணன் முருகேசன் பெரியநாயக்கன்பாளைய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேப்போன்று ஆனைமலைப் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், பிரியா தம்பதியரின் மகன் தன்ராஜ் (14). விடுதியில் தங்கி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் செவ்வாயன்று காலை விடுதி காப்பாளர் தன்ராஜின் அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு அவர் இல்லாததைக் கண்டு பெற்றோர்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆனைமலை காவல் நிலையத்தில் பிரியா புகார் அளித்ததைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...