சிறுவாணி அணை விவகாரம்: மத்திய அரசின் உத்தரவுக்கு புதிய தமிழகம் கட்சி வரவேற்பு

கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 

''சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது 

வரவேற்கத்தக்கது. கேரள அரசு மீண்டும் சிறுவாணியின் குறுக்கே அணை கட்டும் முயற்சி மேற்கொள்ளுமானால் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு தைல மரங்கள் நட டி.என்.பி.எல் காகித நிறுவனம் முயற்சித்துவருவது கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த முயற்சி கைவிடப்பட வேண்டும். இம்முயற்சி தொடருமானால் மக்களை திரட்டி தனது தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்.

மேலும், கேரளாவில் இருந்து கோவைக்குள் மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்படுவதை தடுக்க வேண்டும். இது தொடர்பாக சிறப்பு குழுக்கள் அமைத்து எல்லைச் சாவடிகளில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் நட்பின் அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவு அளிக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் அவருக்கு ஆதரவாக பிரச்சாரமும் மேற்கொள்ளப்படும்'' என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...