சிறுவாணி அணை விவகாரம்: மத்திய அரசின் உத்தரவுக்கு புதிய தமிழகம் கட்சி வரவேற்பு

கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 

''சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது 

வரவேற்கத்தக்கது. கேரள அரசு மீண்டும் சிறுவாணியின் குறுக்கே அணை கட்டும் முயற்சி மேற்கொள்ளுமானால் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு தைல மரங்கள் நட டி.என்.பி.எல் காகித நிறுவனம் முயற்சித்துவருவது கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த முயற்சி கைவிடப்பட வேண்டும். இம்முயற்சி தொடருமானால் மக்களை திரட்டி தனது தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்.

மேலும், கேரளாவில் இருந்து கோவைக்குள் மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்படுவதை தடுக்க வேண்டும். இது தொடர்பாக சிறப்பு குழுக்கள் அமைத்து எல்லைச் சாவடிகளில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் நட்பின் அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவு அளிக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் அவருக்கு ஆதரவாக பிரச்சாரமும் மேற்கொள்ளப்படும்'' என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...