பாகிஸ்தானில் பயங்கரம்: பெண்ணின் கண்ணை தோண்டி எடுத்து, காலை வெட்டிய சகோதரர்கள்

லாகூர்: பாகிஸ்தானில் பெண் ஒருவரை அவரது சகோதரர்களே கடத்திச் சென்று கத்தியால் கண்ணை தோண்டி எடுத்த கொடூரம் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாபர்கரை சேர்ந்த 40களில் இருக்கும் பெண் ஒருவரை அவரது சகோதரர்கள் இரண்டு பேர் சேர்ந்து கடத்தி கத்தியால் கண்களை தோண்டி எடுத்துள்ளனர். மேலும் அவரின் பாதங்களையும் வெட்டியுள்ளனர்.

அந்த சகோதரர்களில் ஒருவரின் மகளை காணவில்லை. இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். தன் மகளை தனது சகோதரி கடத்திவிட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் தான் அவர் தனது மற்றொரு சகதரருடன் சேர்ந்து இப்படி ஒரு கொடுமையை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அந்த பெண் முல்தானில் உள்ள நிஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளபோதிலும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

Newsletter

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...