பணத்தை திருட முயன்றவர் கைது

திருப்பூர் மாவட்டம், திருமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (52). புதனன்று கோவைக்கு வந்துள்ளார். அப்போது உணவு உண்பதற்காக அவிநாசி சாலையில் உள்ள ஒரு உணவகம் முன்பு தனது காரை நிறுத்திவிட்டு உணவகத்தின் உள்ளே சென்றுள்ளார். 

இதனிடையே, இவரது காரில் வைத்திருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை மர்மநபர் ஒருவர் திருடிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட அர்ஜூனன் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரைப் பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...