பறவை காய்ச்சல் பரவலை தடுப்பது தொடர்பாக ஆட்சியர், கால்நடைதுறை, சுகாதார துறை அதிகாரிகள் ஆலோசனை


கேரளாவில் பறவை காய்ச்சல் பரவிவரும் நிலையில் கோவையில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான நோய் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோயானது வேகமாக பரவி வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் பறவை காய்ச்சலானது பரவி விடாமல் இருக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக தமிழக கேரள எல்லையோரம் இருக்கும் மாவட்டங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று மாலை முகாம் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆட்சியர் ஹரிகரன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் கால்நடைபராமரிப்பு துறை, சுகாதார துறை, வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோருடன் கோழி பண்ணை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கேரளாவில் இருந்து வாத்து, முட்டை, கோழி தீவனங்கள் போன்றவை ஏற்றி வரும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் 12 வழித்தடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள் 36 குழுக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மறு உத்திரவு வரும் வரை தொடந்து ஈடுபடவும் ஆட்சியர் ஹரிகரன் அதிகாரிகளுக்கு அறிவுத்தினார்.மேலும் நோய் கிளர்ச்சி ஏற்பட்டால் அதை உடனடியாக கட்டுப்படுத்தும் பொருட்டு தேவையான மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க உத்திரவிட்ட ஆட்சியர், நோய் தடுப்பிற்காக பயிற்சி அளிக்கப்பட்ட 40 அதிரடி குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆட்சியர் ஹரிகரன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...