பறவை காய்ச்சல் பரவலை தடுப்பது தொடர்பாக ஆட்சியர், கால்நடைதுறை, சுகாதார துறை அதிகாரிகள் ஆலோசனை


கேரளாவில் பறவை காய்ச்சல் பரவிவரும் நிலையில் கோவையில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான நோய் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோயானது வேகமாக பரவி வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் பறவை காய்ச்சலானது பரவி விடாமல் இருக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக தமிழக கேரள எல்லையோரம் இருக்கும் மாவட்டங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று மாலை முகாம் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆட்சியர் ஹரிகரன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் கால்நடைபராமரிப்பு துறை, சுகாதார துறை, வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோருடன் கோழி பண்ணை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கேரளாவில் இருந்து வாத்து, முட்டை, கோழி தீவனங்கள் போன்றவை ஏற்றி வரும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் 12 வழித்தடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள் 36 குழுக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மறு உத்திரவு வரும் வரை தொடந்து ஈடுபடவும் ஆட்சியர் ஹரிகரன் அதிகாரிகளுக்கு அறிவுத்தினார்.மேலும் நோய் கிளர்ச்சி ஏற்பட்டால் அதை உடனடியாக கட்டுப்படுத்தும் பொருட்டு தேவையான மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க உத்திரவிட்ட ஆட்சியர், நோய் தடுப்பிற்காக பயிற்சி அளிக்கப்பட்ட 40 அதிரடி குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆட்சியர் ஹரிகரன் தெரிவித்தார்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...