பழங்குடியினரின் இடத்தை ஆக்கிரமித்த ஈஷா- உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் இயக்கத்தினர் கைது



கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா மையத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 44 ஏக்கர் நிலங்களை மீட்டு பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கக் கோரி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 1971ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கோவை முட்டத்துவயல் பகுதியில் முத்துச்சாமி (அ) அமெரிக்க கவுண்டர் என்பவரால் பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 44 ஏக்கர் நிலம் பட்டா செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி வருவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.



இதைத்தொடர்ந்து, ஈஷா அமைப்பால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தை மீட்டு பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என பல்வேறு சமூக அமைப்புகளின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில் குடியேறும் போராட்டம் வெள்ளியன்று (இன்று) நடைபெற்றது.



கோவை இருட்டுப்பள்ளம் பகுதியில் இருந்து பேரணியாக வந்த அவ்வமைப்பினரை செம்மேடு பகுதியின் முன்பாக காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து, தமிழ்புலிகள் அமைப்பின் தலைமை நிலைய செயலாளர் முகிலரசன் கூறுகையில், முதற்கட்டமாக குடியேறும் போராட்டம் நடைபெற்றுள்ளது. அடுத்த கட்டமாக மக்களைத் திரட்டி ஈஷா அமைத்துள்ள வேலிகளை பிடுங்கி எறியும் போராட்டம் நடத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி தமிழ்புலிகள் அமைப்பினர் மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக ஏராளமான காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.



Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...