ஓய்வூதியம் கோரி கட்டிடத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவையில் அமைப்புசாரா கட்டிட கட்டுமானத் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் கேட்டு திருச்சி சாலையிலுள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்திருந்த 60 வயது நிறைவடைந்த கட்டுமான தொழிலாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அவர்களின் மனுவை மறு பரிசீலனை செய்யக் கோரியும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 



இதில், கட்டிட தொழிலாளர்கள் வாயில் கறுப்புத் துணி கட்டி நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை நலவாரிய அதிகாரியிடம் அளித்தனர். மேலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் உறுதியளிக்கும்வரை இந்தப் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...