காந்திபுரம் வணிக சாலையை சீர் செய்யக்கோரி தேமுதிக புகார்


காந்திபுரம் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கக் கோரி தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் 51 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான காந்திபுரம் 5 முதல் 9 வது வீதி, நேரு வீதி, லஜபதிராய் வீதி, விவேகானந்த வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு நிலத்தடியில் மின்சாரக் கம்பி புதைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தற்போது வரை மிக மந்தமான நிலையிலும், பணிகள் முடிந்த பகுதிகளில் சாலை சீரமைக்கப்படாமலும் மேற்கண்ட பகுதிகளில் மிகமோசமான நிலையில் சாலைகள் காணப்படுகின்றன. 

நகரத்தின் முக்கிய பகுதி மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகவும் இருக்கும் காந்திபுரத்திற்கு நாள்தோரும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். மேலும் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், முதியவர்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குண்டும், குழியுமான இச்சாலையினால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...