பொது சிவில் சட்டத்தை எதிர்த்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்


தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் உபைதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் சர்மிளா பேசுகையில்; இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின் 25ம் பிரிவு இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் தங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றவும், நடைமுறைபடுத்தவும், பரப்பவும் உரிமை அளித்துள்ளது. இந்நிலையில், தற்போது ஆட்சி செய்யக்கூடிய மத்திய அரசு முஸ்லீம்கள் பின்பற்றும் ஷரீஅத் சட்டத்தை பின்பற்றுவதை தடுத்து பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி முஸ்லீம் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான போர் என அவர் தெரிவித்தார். 

இதில், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் நஷீமா, விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாநில பொதுச் செயலாளர் பர்ஜானா மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...