ஈராக்கில் கடும் போர் ஐ.எஸ். தீவிரவாதி தலைவர் பக்தாதி மொசூலில் இருந்து தப்பி ஓட்டம்

ஈராக்கில் கடும் போர் நடைபெறுவதால் மொசூலில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதி தலைவர் பக்தாதி தப்பி ஓடி விட்டார்.

ஈராக்கில் ஐ.எஸ். தீவிர வாதிகளிடம் இருந்து மொசூல் நகரை கைப்பற்றுவதில் ராணுவம்  தீவிரமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் குர்து படையினரின் ஆதரவுடன் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போர் கடுமையாக இருப்பதால் தாக்கு பிடிக்க முடியாமல் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் மொசூலின் பெரும்பாலான பகுதிகள் ஈராக் ராணுவம் வசம் வந்து விட்டது.

இதற்கிடையே, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்தாதி நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தார். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என தெரியாமல் இருந்தது.

போர் உச்ச கட்டத்தை அடைந்த நிலையில் திடீரென அவரது பேச்சு அடங்கிய ஆடியோ வெளியானது. அதில் மொசூல் நகரை தக்க வைக்க ஐ.எஸ். அமைப்பினர், தொடர்ந்து போராட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். எனவே  அவர் மொசூலில் பதுங்கி இருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால் அவர் மொசூல் நகரில் இல்லை. அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என இங்கிலாந்து வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் அமைப்பின் உளவுத் துறை அளித்துள்ள  தகவலின் அடிப்படையில் தாம் இதை தெரிவிப்பதாக அவர் கூறி யுள்ளார். 

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...