தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 'எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம்' பிரச்சாரம் ஆலோசனைக் கூட்டம் .

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம் பிரச்சாரம் நவம்பர் 7 ம் தேதி சர்.சி.வி.ராமன் பிறந்த நாளையொட்டி நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை தாமஸ் கிளப்பில் நடைபெற்றது.  
 

இந்தியாவில் தற்போது மதம் மற்றும் சாதியங்கள் தலைதூக்கி உள்ளது.  இதை முறியடிக்கும் வகையில் இந்தியாவின் பன்முகத் தன்மையும், சமூக நீதியையும் பாதுகாக்கும் வகையிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 7ம் தேதி சர்.சி.வி.ராமன் பிறந்தநாளை யொட்டி 'எங்கள் தேசம்' என்ற கோஷத்தோடு நாடு முழுவதும பிரச்சார இயக்கம் நடைபெற உள்ளது. 

இப்பிரச்சார இயக்கத்தில் வரலாற்று ஆய்வு மாநாடுகள் அறிவியலின் வரலாற்று நிகழ்வுகள், உலகம் மற்றம் மனிதம் தோன்றிய வரலாறுகள், தெருமுனை பிரச்சாரங்கள் மாணவர்களுக்கான கட்டுரை/ ஓவிய போட்டிகள் நடைபெறவுள்ளது.  இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் நவம்பர் 7ம்தேதி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, நவ. 19ம் தேதி ஆசிரியர்கள் அறிவியல் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்திற்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பெ.நடராஜன் தலைமை விகித்தார்.  மாநில தலைவர் பேராசிரியர் மேகலா, மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது பாதுஷா, மாவட்ட செயலாளர் ஆர்.கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இப்பிரச்சார் இயக்கம் 2017ம் ஆண்டு நவம்பர் வரை ஓராண்டு காலம் நடத்தப்படும் என அலோசனையில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...