நொய்யல் நதியின் முன்னாள் தோற்றத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச்சென்ற பக்தி நிகேதன் நாட்டிய அமைப்பினர்


கொங்கு மண்டலத்தின் நீராதாரமாகவும், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விலங்குகளின் வாழ்வாதாரமாகவும் திகழ்ந்தது நொய்யல் நதி பல்வேறு விதமான உயிரினங்களின் நீர்த்தேவையினை ஒரு காலத்தில் நொய்யல் பூர்த்தி செய்து வந்தது. ஆனால், மனிதர்களின் வளர்ச்சி மற்றும் சரியான பராமறிப்பின்மையால் நொய்யல் நதி தற்போது வழித்தடமாக மாறியுள்ளது. இதனை மீண்டும் மீட்டெடுத்து நொய்யல் நதியை செழிப்படையச் செய்ய வேண்டும் என பல தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும் முயற்சித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பக்தி நாட்டிய நிகேதன் என்னும் நாடக அமைப்பின் சார்பில் நொய்யல் நதி குறித்தான ஒரு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கருணசாகரி ஏற்பாடு செய்திருந்தார். 



இந்த நாடக நிகழ்வின் போது அந்த அமைப்பின் நடனக் குழுவினர் நொய்யலின் கடந்தகாலத் தோற்றத்தினை அப்படியே நடனமாக வெளிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

ஆறுகள் தான் தண்ணீரின் அடிப்படை ஆதாரமாக உள்ளது. ஆனால், மக்கள் வசிக்கும் பகுதியில் குழாய்களில் நீர் வருவதினால் மக்களுக்கு நதிகள் அழிந்துவருவது குறித்து சிறிதும் கவலையில்லை. அதுவும் ஒருகட்டத்தில் வற்றிவிடும். அப்போது, நீரின் ஆதாரமான ஆறுகள் குறித்து நாம் கவலையடைவோம்.

பல்வேறு ஆண்டுகலாக கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் நொய்யலால் பயனடைந்து வந்தன. நாம் அதனை அழித்ததன் தொடர்ச்சி அதனால் பயனடைந்து வந்த விவசாயம் மாய்ந்துபோனது. அதனை நம்பி இருந்த பல உயிரினங்கள் இடம்பெயர்ந்தன.

அழிவின் பாதையில் இருந்து இயற்கையையும், நம்மையும் பாதுகாக்க நொய்யலை மீட்டெடுப்பது அவசியம் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு பக்தி நாட்டிய நிகேதன் அமைப்பினர் நடனம் நிகழ்த்தினர். நடனக் கலைஞர்களின் சிறப்பான நடனம் பார்வையாளர்களை நொய்யலின் முந்தைய காலத்திற்கே அழைத்துச் சென்றதாக அமைந்தது. கலைஞர்கள் தங்கள் நடனத்திறன் மூலம் நொய்யலை திரும்பப் பெறுவது, அதை நாம் இன்னும் பொறுப்புடனும், சூழலியல் நட்புடனும் பாதுகாப்பது என்று வலியுறுத்தினர்.





























Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...