தேசிய தலைநகர் மண்டலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுங்கள்: 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: தேசிய தலைநகர் மண்டலத்தில் (என்சிஆர்) காற்று மாசுவை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று டெல்லி உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய சுற்றுப் புறச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தேசிய தலைநகர் மண்டலத்தில், டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, ராஜஸ் தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் அடங்கும். அண் மைக் காலமாக என்சிஆர் பகுதியில் காற்று அதிகமாக மாசு அடைந்து வருகிறது. இதற்கு, அரியானா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் உள்ள அனல் ஆலைகளிலிருந்து வெளிவரும் சாம்பல், பயிர்கள் தீயில் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை போன்றவை முக்கிய காரணங்களாகும். இதனால் அந்த பகுதியில் வாழும் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் உள்ளன. இதனால் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கிறது.

இதே நிலை நீடித்தால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. டெல்லி, அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சுற்றுப்புறச்சூழல் அமைச்சர்களுடனான சந்திப்பை நேற்று முன்தினம் மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் நடத்தியது. அந்த கூட்டத்தில், என்சிஆர் பகுதியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க 5 மாநில அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், பயிர்களை எரிப்பது, மாசு ஏற்படுத்தும் செங்கல் ஆலைகளை மூடுதல், அனல் ஆலைகளிலிருந்து சாம்பல் வெளியேறுவதை கட்டுப்படுத்துதல் மற்றும் சாலைகளில் தூசி பிரச்சினையை திறம்படகையாளுதல் போன்ற நடவடிக்கைகளை 5 மாநிலங்களும் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன.

காற்று மாசுவை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி அரசிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்கு, சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு ஏற்படாத வகையில் ஆலைகளை இயக்குமாறு என்டிபிசிக்கு விரைவில் கடிதம் எழுதபோவதாக கெஜ்ரிவால் அரசு தெரிவித்தது. மேலும், காற்று மாசினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் ஆய்வு கூட்டம் நடத்தும் படி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மத்திய அமைச்சகம் உத்தரவிட்டது. மேலும், ஒவ்வொரு காலாண்டும் காற்று மாசுவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் ஆய்வு செய்யும் என்றும் தெரிவித்தது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...