கோவை அறம் அறக்கட்டளை மற்றும் நடராஜ் ஸ்ரீசரோஜினி அறக்கட்டளை சார்பில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி புத்தகம்


கோவை அறம் அறக்கட்டளை மற்றும் நடராஜ் ஸ்ரீசரோஜினி அறக்கட்டளை இணைந்து அரசுப் பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி மற்றும் வினா விடை வங்கி புத்தகம் இலவசமாக 1700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. 730 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் சிறப்பு ஆசிரியர் குழுவினைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்துப் பாடப்பரிவுக்கான முழுமையான வழிகாட்டி மற்றும் 70 மாதிரி வினாக்கள் இடம் பெற்றுள்ளன. 



கிக்கானி மேல்நிலைப்பள்ளி, சரோஜினி நடராஜ் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குற்றவியல் அரசு வழக்கறிஞர் கே.ஆறுமுகம், கிக்கானி கல்விக் குழும தாளாளர் துசார் ஆர்.கிக்கானி, வழக்கறிஞர் கூட்டுறவு சேவா சங்க தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், கூடுதல் அரசு வழக்கறிஞர் அகஸ்டஸ், நடராஜ் ஸ்ரீசரோஜினி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம்.என்.பத்மநாபன், கோவை அறம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரகுராமன், தன்னம்பிக்கை மற்றும் நினைவாற்றல் பயிற்சியாளர் ஆர்.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...