வயநாட்டில் குண்டு காயத்துடன் இறந்துகிடந்த காட்டு யானை

நீலகிரி, முதுமலை அடுத்த தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ளது வயநாடு. இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை என பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், அப்பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் வயநாடுக்குட்பட்ட அதிரட்டுகுனி வயல் பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்துகிடப்பதை கண்டனர். தொடர்ந்து அதனை சோதனையிட்ட போது அதன் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருப்பதற்கான தடையம் தென்பட்டது.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து வனத்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வயநாடு அருகே வயல் பகுதியில் யானை நுழைந்து சேதப்படுத்தியதற்காக அதனைக்கொன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...