டெல்லியில் ஏற்பட்டுள்ள மாசு பிரச்சினையை கண்காணிக்க கோரி மனு: நாளை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு

டெல்லி மற்றும் அண்டை நகரங்களில் ஏற்படும் காற்று மாசுபாட்டை கண்காணிக்க கோரி தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு நாளைக்கு விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் கடந்த ஒரு வாரமாக காற்றில் மாசு அதிகரித்து உள்ளது. விடிந்து பகல் பொழுது வந்த பின்னரும் காற்றில் மாசு காணப்படுவதால் டெல்லி நகர மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளும், வயதானோரும் மூச்சு விட சிரமப்படுகின்றனர். கண் எரிச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள். இதனால் பகல் நேரத்தில் டெல்லியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. மக்கள் சுவாச கவசம் அணிந்து நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். காற்று மாசு அபாய கட்டத்தில் இருப்பதால், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு அமைப்பின் ((Prevention and Control) Authority (EPCA) சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் டெல்லி மற்றும் அண்டை நகரங்களில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை கண்காணிக்கவும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.  இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ் தாகூர் மற்றும் நீதிபதிகள் டி ஒய் சந்திரசவுத், எல். நாகேஷ்வர் ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை பிற்பகல் 3.30 மணியளவில் மனுவை விசாரிப்பதாக கூறியது. 

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டுவதை அடுத்து பல்வேறு உத்தரவுகளை  சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்து இருந்தது. டீசலில் இயங்கும் எஸ் யூவி கார்களை பதிவு செய்யக்கூடாது. 2 ஆயிரம் சிசிக்கும் அதிகமாக திறன் கொண்ட கார்களை அனுமதிக்க கூடாது போன்ற பல்வேறு உத்தரவுகள் அதில் அடங்கும். இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய கார் உற்பத்தி சங்கம் மற்றும் பிற அமைப்புகள் அளித்த பிரமாணப்பத்திரத்தை அடுத்து கூடுதலாக ஒரு சத வீத வரியுடன் 2 ஆயிரம் சிசிக்கு அதிகமான திறன் கொண்ட கார்கள் விற்பனைக்கு அனுமதி அளித்தது நினைவிருக்கலாம்

Newsletter

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...