குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை- கல்வி பாதிப்பதாக பள்ளி மாணவிகள் மனு

குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை நடத்தி அப்பகுதியில் செயல்படும் பள்ளியில் கல்வி பாதிப்பதாகவும், மேலும் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறச்சொல்லி மிரட்டி வருவதாகவும் பள்ளி மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை சுகுணா பெப்ஸ் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் தன்யா, ஜிடி மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் நிவேதா ஆகிய பள்ளி மாணவிகள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிறுப்பதாவது:-

''ஏ.செல்வி, தன்யா, நிவேதா ஆகிய நாங்கள் உப்பிலிபாளையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசா நகர், ஹரி ராம் வீதியில் வசித்து வருகிறோம். எங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது இந்த வருட படிப்பு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் எங்களுடைய வீட்டை ஒட்டி அமைந்திருக்கும் கன்னியப்பன் என்பவர் அவருடைய நிலத்தை அரசன் இண்டஸ்ட்ரீஸ் நடத்தி வரும் அரசகுமாரன் என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வாடகைக்கு விட்டார்.

மேற்படி தொழிற்சாலை வந்த பிறகு எங்களது நிம்மதி முற்றிலும் தொலைந்து விட்டது. கால நேரம் இல்லாமல் இரவு நேரங்களிலும் மேற்படி நபர்கள் வேலை செய்கின்றனர். அந்த தொழிற்சாலையில் இருந்து 110 டெசிபலுக்கும் மேலாக ஒலி ஏற்பட்டு எங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும், இரவு நேரங்களில் உறங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறோம். எனது தந்தை பாலசுப்பிரமணியன் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருவதால் காலை 7 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணியளவில் தான் வீடு திரும்புவார். வேறு ஆண்கள் யாரும் எங்களது குடும்பத்தில் இல்லாததால் நாங்கள் மேற்படி நபர்களை அணுகி இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் வேலை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம். ஆனால், அந்த இடத்தின் உரிமையாளர்களும், அவர்களது உறவினர்களும் எங்களது வீட்டினை காலி செய்துவிடுமாறு மிரட்டி வருகின்றனர். மேலும், இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும் புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

உனடடியாக மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி மேற்படி நிறுவனங்களை நடத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...