சாக்கடை நீர் எங்களுக்கு குடிநீரா.? குமுறும் 25 வது வார்டு களிங்க வீதி மக்கள்


அடர் கருப்பு நிறத்தில், மூச்சை திணற வைக்கும் விதமாக துர்நாற்றம் வீசும் வகையில் நீரை குடிக்க கொடுத்தால் நாம் என்ன செய்வோம்? இது தான் கோவை மாநகராட்சியில் வசிக்கும் ஒரு பகுதி மக்களுக்கு குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 25-வது வார்டு பகுதியில் உள்ளது கங்குவார் வீதி என்று அழைக்கப்படும் களிங்க வீதி. 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் உள்ளன. இதில் முக்கியமானது குடிநீர் பிரச்சனை. 



6 அல்லது 8 நாட்களுக்கு ஒருமுறை இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சாக்கடை நீர் பாதையும், குடிநீர் குழாய் செல்லும் பாதையும் அருகருகே அமைக்கப்பட்டுள்ளதால் குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதாக களிங்கவீதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சாந்தி என்ற பெண் கூறியதாவது:- 



நான் கடந்த 30  ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகிறேன். ஒரு ஆண்டுக்கு முன்னர் பாதாள சாக்கடை திட்டத்திற்காக எங்கள் பகுதியில் குழி தோண்டி குழாய் அமைத்தனர். அன்று முதல் இன்று வரை எங்களுக்கு குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. அதிலும் கடந்த 6 மாதங்களாக குடிக்கமட்டுமின்றி கண்ணால் பார்ப்பதற்கே அருவருப்பான நிலையில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து அடர் கருப்பு நிறத்தில் சாக்கடை நீர் போலவே வரும் இந்த நீரை எவ்வாறு நாங்கள் குடிப்பது? 

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தோம். அவர்கள் ஒருமுறை வந்து குடிநீர் வழித்தடத்தை மாற்றி கொடுத்தார்கள். ஆனால் குடிநீர் பிரச்சனை  தீர்ந்தபாடில்லை. பலமுறை அதிகாரிகளுக்கும், எங்கள் வார்டு கவுன்சிலர் ஜெயபால் என்கிற இலை ஜெயபாலு-விற்கும் புகார் அளித்தோம். கண்துடைப்பிற்கு வந்து பார்த்துவிட்டு செல்கின்றனரே தவிர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது 2 தெரு தாண்டி சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். அவர்களும் 3 குடம் நீருக்கு மேல் கொடுப்பதில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.



குழந்தைகளும், கர்பிணிகளும், வயதானவர்களும் வசிக்கும் இப்பகுதியில் குடிநீர் பிரச்சனை மட்டுமின்றி, கழிவுநீர் தேங்கி நிற்கும் பிரச்சனைகளும் உள்ளது. இதனால், இங்கு வாழும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து 25-வது வார்டு உறுப்பினர் ஜெயபால் நமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:- 

பிள்ளையார் தெரு மற்றும் களிங்கவீதியில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். தற்போது பிள்ளையார் தெருவில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, களிங்கவீதியிலும் புதிய நீர் குழாய் அமைக்கப்படும். அதோடு, களிங்கவீதியில் சாக்கடை அடைப்பிற்கு 24 வது வார்டு பகுதியில் உள்ள கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பே காரணம். இது குறித்து அந்த வார்டு உறுப்பினரிடமும் புகார் அளித்துள்ளோம். விரைவில் பிரச்சனைகள் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மாநகரத்தில் ஏற்பட்டுள்ள இது போன்ற, சுகாதார சீர்கேடுகளை விரைவில் ஒழுங்குபடுத்த வேண்டும். அப்போது தான் கோவை உண்மையான ஸ்மார்ட் சிட்டி என்ற அந்தஸ்த்தை பெரும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு இடத்தில் பிரச்சனை வரும்போது அதை சரிபடுத்த நடவடிக்கை எடுக்காமல், அடுத்தவர்களிடம் அந்த பிரச்சனைகளை ஒப்படைக்கும் செயலை தவிர்த்து அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வழிமுறைகளை யோசித்து, செயல்படுத்தினால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...